கோயம்புத்தூர் மாவட்டம், மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைகவசம் அணிவது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இவ்விழிப்புணர்வு பேரணியில், மாநகர காவல் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) பெருமாள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாஸ்கரன், குமாரவேல், ராஜு, சரவணன் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைகவசம் அணிவது அவசியம்
